புதுடெல்லி:
சென்னை நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் வெளியிட்டது, சஞ்சிப் பானர்ஜி இடமாற்றம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கொலீஜியம் அளித்த உத்தரவை அடுத்து குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். சென்னை நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இடமாற்றத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.