சென்னை

துவரை கூட்டணி குறித்து பாஜக எவ்வித பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை என பிரேமலதா விஜயகாந்த் கூறி உள்ளார்.

தமிழகத்தில் பாஜகவுடனான கூட்டணியில் அதிமுக முக்கிய இடத்தில் இருந்தது.  சமீபத்தில் அதிமுக பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அறிவித்தது.  இது பலரும் எதிர்பார்த்த ஒன்று என்றாலும் அடுத்த வருடம் தேர்தல் நடக்க உள்ள நிலையில் கூட்டணி முறிவு பல் அதிர்வலைகளை ஏற்படுத்தியது/

பாஜகவின் மற்றொரு கூட்டணி கட்சியான தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அவர் கூட்டணி தொடர்பாகச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது பிரேமலதா விஜயகாந்த்,

“இதுவரை கூட்டணி குறித்து பா.ஜ.க. தரப்பில் இருந்து யாரும் எங்களைத் தொடர்பு கொண்டு பேசவில்லை. தற்போது வரை நாங்களும் அதுபற்றிய பேச்சுவார்த்தையைத் தொடங்கவில்லை. உரிய நேரத்தில் உரிய நேரத்தில் அதற்கான பேச்சுவார்த்தை தொடங்கி, கூட்டணி பற்றிய அறிவிப்பை வெளியிடுவோம்.” 

என்று பதிலளித்துள்ளார்.