பெங்களூரு,

முஸ்லிம்கள் ராம் மந்திர் மற்றும் பசு மாடுகளை அழித்தொழிப்பு மசோதாவை எதிர்த்து நிற்கும் வரை, இந்துக்கள் அவர்களுடன் பொருளாதார நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும், அவர்களிம் எந்தவித பொருளும் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்றும் ஸ்ரீராம் சேனை தலைவர் முத்தாலிக் கூறி உள்ளார்.

ஸ்ரீ ராம சோனைத் தலைவர் பிரமோத் முத்தாலிக் மீண்டும் தனது இனவாத சர்ச்சை  பேச்சை தொடங்கி உள்ளார்.

மேலும் , 2014ம் ஆண்டின்போது, முஸ்லீம் கலைஞர்களை கார்பா  நிகழ்ச்சிகளில் இருந்து தடை செய்ய வேண்டும் என்று சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் கடந்த ஆண்டு, பெங்களூர் மடம் ஒன்றில் நடைபெற்ற இப்தார் விருந்துக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தும், இனிமேல் கோவில்களில் இப்தார் நிகழ்ச்சிகள் நடைபெற்றால் ரத்த ஆறு ஓடும் என்று மிரட்டியிருந்தது இருந்தார்.

இந்நிலையில் தற்போது, இந்துக்கள்  இஸ்லாமியர்களிடம் உடனான பொருளாதார நடவடிக்கை களை நிறுத்த வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

மங்களூரில் நடைபெற்ற மத்தூ பூஜா கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஸ்ரீராம் சேனை தலைவர் முத்தாலிக், இந்துக்கள், முஸ்லீமுடன் வியாபாரம் செய்வதை நிறுத்த வேண்டும் என்றும், பொருளாதார ரீதியாக அவர்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அயோத்தியில் ராம மந்திர் கட்டுமானத்தை முஸ்லிம்கள் எதிர்க்கின்றனர். அதுபோல பசுவதை தடை சட்டத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் வந்தே மாதரம் பாடலை பாடவும் மறுக்கின்றனர். ஆகவே அவர்களிடம் நாம் பொருளாதார ரீதியிலான உறவை தவிர்க்க வேண்டும் என்றும்,

இந்துக்கள் ஒவ்வொருவரும் அவர் வீடுகளில் ஆயுதங்கள் வைத்து அதை வணங்க வேண்டம் என்றும், இது மோசமான காலங்கள் மற்றும் அட்டூழியங்கள், பயங்கரவாதம், ஊழல்கள் ஆகியவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் என்றும் கூறினார்.

“கேரளாவில், இந்துக்களின் எண்ணிக்கை 50% குறைந்துவிட்டது என்றும், இஸ்லாமியர்கள் நாடு முழுவதும் மசூதிகள் கட்ட உத்தரவு வாங்குகின்றனர், ஆனால், நாம்  அயோத்தியில் ராம் மந்திர் கட்ட முடியாத நிலையில் இருப்பது துரதிர்ஷ்டமானது என்றும் கூறினார்.

முத்தலிக்கின் இந்த பேச்சு மக்களிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.