FIDE உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் அஜர்பெய்ஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது.

ஜீலை 29 ம் தேதி தொடங்கிய இந்த போட்டியின் காலிறுதிச் சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்தியாவின் பிரக்ஞானந்தா – அர்ஜீன் எரிகாய்சி இடையிலான விருவிருப்பான காலிறுதியாட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றிபெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

FIDE போட்டிகளில் இந்தியர் ஒருவர் அரையிறுதிக்குள் நுழைவது இதுவே முதல்முறை.

அரையிறுதிப் போட்டியில் உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரர் பேபியானோ குருவனா உடன் மோத இருக்கிறார்.

இந்த போட்டிகள் ஆகஸ்ட் 25ம் தேதி நிறைவு பெறுகிறது.