டெல்லி: யுபிஎஸ்சி எனப்படும் மத்திய குடிமை பணியின் புதிய தலைவராக டாக்டர் பிரதீப் குமார் ஜோஷி பதவியேற்று கொண்டார்.

யுபிஎஸ்சி தலைவராக இருந்த அரவிந்த் சக்சேனாவின் பதவிக் காலம் முடிவடைந்தது. இதையடுத்து பிரதீப் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இவர் யுபிஎஸ்சியின் உறுப்பினராக உள்ளார்.

அவர் யுபிஎஸ்சியின் புதிய தலைவராக பிரதீப் குமார் ஜோஷி பதவியேற்றுக் கொண்டார். சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தின் பொது சேவை ஆணையங்களின் தலைவராக இருந்த ஜோஷி, மே 2015ம் ஆண்டில் யுபிஎஸ்சியில் உறுப்பினராக சேர்ந்தார்.

ஜோஷியின் பதவிக்காலம் 2021ம் ஆண்டு மே 12ம் தேதி நிறைவடையும். அவர் தலைவராக நியமிக்கப்பட்டதால், யுபிஎஸ்சியில் ஒரு உறுப்பினர் இடம் காலியாக உள்ளது.