தமிழ் சினிமாவில் அனைவராலும் செல்லமாக பவர் ஸ்டார் என்று அழைக்கபடுபவர் சீனிவாசன்.

இவர் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த லத்திகா திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இந்நிலையில் உயர் ரத்த அழுத்தம் காரணமாக நடிகர் பவர் ஸ்டார் மதுரவாயலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு உயர் ரத்த அழுத்தம் காரணமாக முதுகு வலி ஏற்பட்டுள்ளது.எனவே மூன்று வாரங்கள் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.