திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக ஜூன் 4ந்தேதி (சனிக்கிழமை)  மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு மின்உற்பத்த்தி மற்றும் பகிர்மா கழகம்  அறிவித்து உள்ளது.

இதுகுறித்து திருப்பத்தூர் மின்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மின்பகிர்மான வட்டம், திருப்பத்தூர் கோட்டத்தில் உள்ள துணை மின்நிலையங்களில் அவசர பணிக்காக மின் நிறுத்துவது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, துணைமின்நிலையங்களில் அவசர பணி, மின் சோதனை, பராமரிப்பு பணிகளுக்காக ஜூன் 4ந்தேதி  காலை 9மணி முதல் மாலை 5மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

திருப்பத்தூர் பகுதி:  திருப்பத்தூர் டவுன், சி.ஆசிரமம், பொம்மி குப்பம், ஹவுசிங் போர்ட, கரிசிலாப்பட்டு, மடவாளம், மாடபள்ளி, சொந்தம்பள்ளி, தாதனவலசை, வெங்கனாபுரம், ஆதியூர், நந்தனம் காலேஜ், மொவகாரம்படி,

திருப்பத்துர் பகுதி: ஆசிரியர் நகர், திரியாலம், பாச்சல், அச்சமங்கலம் கருப்பனூர்,

கந்திலி பகுதி: கந்திலி, வேப்பல்நத்தம், நந்திபெண்டா, கொத்தாலக்கொட்டாய், புத்தாகரம், பாரண்டபள்ளி

குரிசிலாப்பட்டு பகுதி: குரிசிலாப்பட்டு, மூலக்காடு, ஜவ்வாது மலையில் உள்ள புதூர்நாடு, புங்கம்பட்டு நாடு மற்றும் நெல்லிவாசல் நாடு.

வெலக்கல்நத்தம் பகுதி: ஜெயபுரம், சந்திரபுரம், வேப்பல்நத்தம், பையனப்பள்ளி, வெலக்கல்நத்தம், குனிச்சூர், முகமதாபுரம், செட்டேரி டேம், சுண்ணாம்பு குட்டை, மல்லப்பள்ளி, ஏரியூர், அன்னாசாகரம்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.