சென்னை: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழ்நாடு அரசால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மே 28ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த  தொகுதி-1  (குரூப் 1) முதன்மை தேர்வு, ஒருங்கிணைந்த பொறியியல்  சார்நிலைப் பணிகளில் அடங்கிய  பதவிகளுக்கான தேர்வு, ராணுவ கல்லுரிகளுக்கான நுழைவு  ஆகிய தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.