லிஸ்பன்: உருமாறிய கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பிரிட்டன் விமானங்களுக்கு போர்ச்சுகல் அரசு தடை விதித்துள்ளது.

பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதை தொடர்ந்து பல்வேறு நாடுகளும் அந்நாட்டுடனான விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.

இந் நிலையில் உருமாறிய கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பிரிட்டன் விமானங்களுக்கு போர்ச்சுகல் அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அந்நாட்டின் பிரதமர் அன்டோனியோ கோஸ்டா வெளியிட்டு உள்ளார்.

ஜனவரி 23ம் தேதி முதல் பிரிட்டன் இடையேயான விமானப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாகவும், உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பின் அபாயத்தை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.