ந்தி பிரபல டிவி சீரியல் நடிகை அதிதி குப்தா. இவர், இஷ்குபாஸ், கிஸ் தேஸ் மெயின் ஹை மேரா தில் போன்ற ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார். இவருக்கு சில தினங்களுக்கு முன் வாசனை நுகரும் உணர்வு இல்லாமல் போனது. இதில் சந்தேக மடைந்து கொரோனா டெஸ்ட் எடுத்தார். அதில் பாசிடிவ் என தொற்று உறுதியானது. தற்போது வீட்டில் தனிமையில் இருக்கும் அவர் தொற்றிலிருந்து மீண்டு வருகிறார்.
 

இதுகுறித்து அவர் கூறும்போது,’ திடீரென்று வாசனை உணர்வு இல்லாமல் போனதால் சந்தேகம் அடைந்து என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். எனது குடும்பத்தாரிடம் சொன்னபோது எனக்கு பெரிதும் உதவியாக இருந்தார்கள். டெஸ்ட் எடுத்து பார்த்ததில் கொரோனா தொற்று உறுதியானது. உடனே சிகிச்சை எடுத்துக்கொண்டேன். இதை வெளி யில் சொல்வதற்கு நான் வெட்கப்பட வில்லை.
என்னை தனிமைப்படுத்திக்கொண்டு தைரியமுடன் தகுந்த உணவு மருந்து எடுத்துக் கொண்டு வருகிறேன் தற்போது நுகரும் திறன் திரும்ப வந்துள்ளது. விரைவில் பூரண குணம் அடைந்துவிடுவேன். தொற்று ஏற்பட்ட வர்கள் முதலில் தைரியமுடன் இருக்க வேண்டும், குணம் அடைவோம் என்ற நம்பிக்கையுடன் தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் ’என்றார்.