மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, 303 தொகுதிகளில் வென்று பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.

தமிழகத்தில் சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார்.

திருமாவளவனைச் சந்தித்து பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் திருமாவளவனுக்கு தான் வரைந்த ஓவியத்தைப் பரிசாக வழங்கியுள்ளார் நடிகர் பொன்வண்ணன்.

திருமாவளவனுக்குப் பரிசாக அளித்த ஓவியத்தில் ‘உன் வெற்றி முக்கியமானது!’ என்று தெரிவித்துள்ளார் பொன்வண்ணன்.