சென்னை: தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு வழங்கியதில்  முறைகேடு நடைபெற்றதாக  அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியசாமிமீது தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை செப்டம்பர் 11ந்தேதி நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதரு.


திமுக ஆட்சிக்கு பிறகு, கடந்த ஆண்டு (2022) பொங்கல் பண்டிகையின் போது குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரத்து 296 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டன. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளjக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. மேலும், பொதுமக்களுக்கு தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இதில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, திருவள்ளூரை சேர்ந்த ஜெயகோபி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

அவரது மனுவில், அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் இருந்த வெல்லம், கரும்பு, பருப்பு, புளி உள்ளிட்ட பொருட்கள் தரமற்றவையாகவும், உயிரிழந்த பூச்சிகள் காணபட்டதாக வும் குறிப்பிட்டுள்ளார். தரமற்ற பொருட்கள் வழங்கியதன் மூலம் மக்கள் பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வருக்கு புகார் அளித்ததாகவும், அதன் அடிப்படையில் தரமற்ற பொருட்கள் விநியோகத்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டதுடன், இதுதொடர்பாக, தரமற்ற பொருட்களை வழங்கிய அதிகாரிகள், அவற்றை தடுக்காத உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி ஆகியோருக்கு எதிராக லோக் ஆயுக்தா அமைப்பில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி என்.சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை விசாரிக்க கூடிய அதிகாரம் பெற்ற அமைப்பாக லோக் ஆயுக்தா இருப்பதால், புகாரை விசாரிக்க உத்தரவிட வேண்டுமெனவும், இறுதி வாதங்களை முன்வைக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். அரசு தரப்பிலும் இறுதி வாதங்களை முன்வைக்க ஒப்புதல் தெரிவித்ததை அடுத்து, ஜெயகோபி தொடர்ந்த வழக்கை இறுதி விசாரணைக்காக செப்டம்பர் 11ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.