புதுச்சேரி: பொங்கல் பண்டிகையையொட்டி, புதுச்சேரி மக்களக்கு ரூ.500 மதிப்புள் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்து உள்ளார்.

புதுச்சேரியில் உள்ள அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச பொங்கல் பரிசு வழங்கப்படும் எனப் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஆண்டு, பொங்கல் பண்டிகையையொட்டி, ரேசன் அட்டைதாரர்களுக்கு, அங்குள்ள  நியாய விலைக் கடையில் 10 பொருட்கள் கொண்ட இலவசப் பொருட்கள் வழங்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும், பச்சரிசி-2 கிலோ; வெல்லம் -1 கிலோ; து.பருப்பு -1 கிலோ; கடலைப்பருப்பு -1/2 கிலோ; பச்சைப்பருப்பு -1/2 கிலோ; உளுந்து -1/2 கிலோ; மஞ்சள் -100 கிராம்; முந்திரி -50 கிராம்; திராட்சை -50 கிராம்; ஏலக்காய் -10 கிராம் அடங்கிய 10 பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நடப்பாண்டு பொங்கல் பண்டிகைக்கு ரூ.500 மதிப்புள்ள இலவச பொங்கல் தொகுப்பை இலவசமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்  தெரிவித்து உள்ளார். அதன்படி,  ‘பச்சரிசி, வெல்லம், உளுந்து, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, பாசி பருப்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட 10 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்றும், இந்த பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என்றும், இதற்காக ரூ.17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்

இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு விரைவில் ரேசன் கடைகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.