டெல்லி: இலவசங்களுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், தேர்தல் நேரத்தில் இலவசங்கள் அறிவிப்பதும், வழங்குவதும் குறித்து தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என கருத்து தெரிவித்ததுடன், இலவசங்களும் சமூக நலத்திட்டங்களும் வெவ்வேறானவை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகள் இலவசங்கள் தருவதாக தேர்தல் வாக்குறுதி வழங்கி, மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடிக்கின்றன. இதனால், மக்கள் சோம்பேறிகளாக மாறி வருகின்றனர். இலவசத்துக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு தங்களது வாக்குகளை செலுத்திவிட்டு, அடுத்த 5 ஆண்டுகள் சொல்லோனா துயரத்துக்கு ஆளாகின்றனர்.  இந்த நிலையில்,  தேர்தல் சமயத்தில் இலவசங்களை அறிவிப்பதற்கு தடை விதிக்கக் கோரி அஸ்வினி உபாத்யாய் தொடர்ந்த மனுவில், அவரது மனுவில்,  ‘தோ்தலின் போது இலவச அறிவிப்புகளை வெளியிடும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசுகள் நிதிநிலையை ஆராயாமல், இலவசங்களை விநியோகிக்கும் முறையை ஆய்வு செய்ய நிபுணா் குழுவை ஏற்படுத்த வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் 293 (3), (4) ஆகியவற்றுக்கு முரணாக, ஏற்கெனவே மாநில அரசுகளின் கடன் நிலுவையில் உள்ள போதிலும், இலவசங்களை விநியோகிக்க அவை கூடுதலாக கடன்பெறுகின்றன. ஆகையால், கடன் மதிப்பீட்டு முறையை ஏற்படுத்துவது அவசியம்’ என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு மீதான உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் இன்று  நடைபெற்று வருகிறது. இன்று 2வது முறையாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதி,  இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் பதிலை செய்திதாளில் படித்தோமே தவிர நேற்று இரவு வரை தங்களுக்கு கிடைக்கவில்லை என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

அதையடுத்து வாதாடிய  மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் கூறினார். இதை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என்றார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி,  நாங்கள் சட்டம் இயற்ற உத்தரவிட வேண்டுமா என  கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்தவர், மத்திய அரசு தான் சட்டம் இயற்ற வேண்டும் என்று கூறினார்.

அதையடுத்து பேசிய தலைமைநீதிபதி,, தேர்தல் வாக்குறுதி அறிக்கைகளை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பார்களா ? என கேள்வி எழுப்பினார்.

ஆனால், தேர்தல் ஆணைய விதிப்படி, அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை தாக்கல் செய்ய வேண்டும் என கட்டாயம் இல்லை என  தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார்.

ஆனால், மத்தியஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பெரும்பாலான தேர்தல் இலவச வாக்குறுதிகள் அறிக்கையில் இடம்பெறுவதில்லை என சுட்டிக்கட்டியது. மேலும், இலவச அறிவிப்புகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன்பின், தலைமை நீதிபதி ரமணா கூறுகையில், இலவசங்கள் சமூக நல திட்டங்களும் வெவ்வாறானவை. பட்டினியால் தவித்த மக்களுக்கு உணவளிக்க மத்திய அரசும் சில திட்டங்களை வைத்துள்ளது. மேலும் ஒரு கட்சி ஆட்சிக்கு வரும்போது, அந்த மாநிலத்தின் நிதிநிலைமை என்னவென்று தெரியாது. ஆட்சிக்கு வந்ததும், எதையாவது செய்ய வேண்டும் என்பதற்காக இலவச அறிவிப்புகளை நிறைவேற்றக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

இலவசங்களால் அரசு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இலவசத்தால் மின்சாரத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை கொடுங்கள், இதை கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட்டால் அதை இந்தியா போன்ற நாட்டில் செயல்படுத்த முடியாது. எனவே, இந்தியா போன்றதொரு நாட்டில் இலவசங்களை கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது. ஆனால், அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் இலவசங்கள் அறிவிப்பதும், வழங்குவதும் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.  இலவசங்களுக்கு செலவிடும் பணத்தை கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிக்கு பயன்படுத்தலாம் என தெரிவித்தார்.

பொருளாதார இழப்பு, மக்கள் நலன் இரண்டுக்கும் ஒரு சமநிலையில் இருக்க வேண்டும். அதனால்தான் இந்த விவகாரத்தில் உங்கள் ஒவ்வொருவரின் கருத்து, பார்வை மற்றும் எண்ணங்களை மென்மொழிய கூறுகிறோம் என்றும் தலைமை நீதிபதி கூறினார்.

இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் பதிவை ரத்து செய்வது ஜனநாயக விரோத செயல் என்பதால் அதனை பரிசீலிக்க மாட்டோம் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதனிடையே, இலவச அறிவிப்புகள் வாயிலாகத்தான் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும் என்றால், நாம் பொருளாதார பேரழிவை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறோம் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பு வாதம் முன்வைத்தது.

அப்போது குறுக்கிட்டு பேசிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், கட்டணமில்லா பேருந்து திட்டம் இலவசமா? இலவசத் திட்ட அறிவிப்புகள் ஒரு சிக்கலான விவகாரம். இதை ஆராய போதுமான தகவல்கள் தேவை என தெரிவித்தார்.

அதுபோல ஆம் ஆத்மி கட்சி தரப்பில்,  இலவசத் திட்டங்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.