தஞ்சாவூர்:
ஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

தஞ்சாவூர் அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் அம்மன்பேட்டையை சேர்ந்த முருகானந்தம். இந்த காவல் நிலையத்திற்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தஞ்சாவூர் ஆயுதப்படை பிரிவிலிருந்து ஒரு பெண் காவலர் பணிக்கு வந்துள்ளார். அவர், இரவில் காவல் நிலையத்தில் உள்ள ஓய்வு அறையில் தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த பெண் காவலரிடம் முருகானந்தம் கடந்த 13-ஆம் தேதி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து, அந்த பெண் காவலர் கொடுத்த புகாரின் பேரில், அய்யம்பேட்டை காவலர்கள் கடந்த 14ம் தேதி முருகானந்தத்தை கைது செய்து, தஞ்சாவூர் 3-ம் எண் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, இந்த சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்தி வருகின்றனர்.