புதுடெல்லி:
ச்சநீதிமன்றம் வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் கரோனா தொற்றின் 2ஆவது அலை வேகமாகப் பரவி வருகிறது. நேற்று மட்டும் 1.68 லட்சம் பேருக்கு கரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தினசரி கரோனா பாதிப்புகளில் புதிதாக, மகாராஷ்டிரத்தில் 55,411 பேரும், சத்தீஸ்கரில் 14,098 பேரும், உத்தர பிரதேசத்தில் 12,748 பேரும் பதிவாகியுள்ளன. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் பல ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்குகளை வீட்டிலிருந்து காணொலி மூலம் விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர். ஊழியர்கள் பலருக்கு கரோனா ஏற்பட்டதையடுத்து பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உச்சநீதிமன்றம் வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற ஊழியர்கள் பலருக்கு தொற்று உறுதியானதை அடுத்து கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.