சென்னை:
மிழக காவல்துறை சிறந்து விளங்குகிறது என்று துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் தமிழக காவல் துறைக்கு குடியரசு தலைவர் கோடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்று, குடியரசு தலைவர் கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.

இந்த விழாவில் பேசிய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக காவல் துறை இந்தியாவிலேயே சிறந்த காவல் துறையாக விளங்குகிறது. அதிகளவில் நடைபெறும் சைபர் குற்றங்களை போலீசார் அறிவியல் புர்வமாக தடுக்க வேண்டும், சிலை கடத்தல தடுப்பு பிரிவு என்று தனியாக ஒன்று செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது என்று தெரிவித்தார்.