சென்னை: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை உண்ணாநிலைப் போராட்டம் நடைபெறுவதாகஅறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திமுகவின் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள்  போராட்டம் நடத்தி வரும் நிலையில்  திமுக கூட்டணி கட்சிகள் நடத்திய கூட்டத்தின்படி, 18ந்தேதி அன்று காலை  8 மணி  முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பாக நாளை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது.   ஆனால்  நாளை திமுக நடத்த உள்ள  உண்ணாநிலைப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.