சென்னை: ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் ‘சூர்யாவை எட்டி உதைத்தால் ரூ.1 லட்சம் பரிசு’ என அறிவித்த பாமக பிரமுகசர் சித்தமல்லி பழனிச்சாமி மீது மயிலாடுதுறை காவல்துறையினர்  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதைத்தொடர்ந்து, பாமக கட்சி நிர்வாகி சித்தமல்லி பழனிசாமி என்பவர், எங்களுடைய பகுதிக்கு சூர்யா வந்தால் அவரை எட்டி உதைக்கும் இளைஞருக்கு ஒரு லட்சம் ரூபாய் பணத்தை சமர்ப்பணமாக கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் எனவும், அந்த வகையில் நாங்கள் அவனை தாக்குவதற்கு தயாராக இருக்கிறோம். எனவே இனி சூர்யா எங்கும் நடமாடவே கூடாது என வன்முறையை தூண்டும் வகையில் பேசியிருந்தார். இது கடுமையான விமர்சனங்களை எழுப்பியது.

இந்த நிலையில்,   ரூ.1 லட்சம் பரிசு என அறிவித்த . மயிலாடுதுறை மாவட்ட பாமக செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.