கோவை: காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்ட சவுக்கு சங்கரை உடனே கோவை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக, நீதி மன்ற உத்தரவின்பேரில் சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர்கள் மற்றும் அரசு மருத்துவக்குழுவினர் சிறைக்கு சென்று சவுக்கு சங்கர் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். அதுதொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் தனித்தனியாக சமர்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சவுக்கு சங்கரை உடனே மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டது. இதையடு த்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஉள்ளார்.
பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், ரெட்ஃபிக்ஸ் எனப்படும் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாகவும், மகளிர் போலீசார் குறித்தும் பாலியல் தொடர்பான கருத்துகளை தெரிவித்ததாகவும் கூறப்படகிறது. இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா என்ற பெண் போலீசார் புகார் கூறியதைத் தொடர்ந்து, கோவை சைபர் கிரைம் போலீசார், தேனியில் இருந்த சவுக்கு சங்கரை நள்ளிரவு கைது செய்தனர். மேலும் அவர்மீது கஞ்சா வழக்கு பதியப்பட்டது.
இந்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், சவுக்கு சங்கர் மற்றும் அவருடன் தங்கி இருந்த டிரைவர் ராம்பிரபு, ராஜரத்தினம் ஆகியோர் கஞ்சா பதுக்கியதாக தேனி மாவட்டம் பழனிசெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ராம்பிரபு, ராஜரத்தினம் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து, மாநிலம் முழுவதும் இருந்து பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு, அவரை ஜாமின் வேளியே வர முடியாத அளவுக்கு காவல்துறையும், திமுக அரசும் செயலாற்றி வருகிறது. சவுக்கு சங்கரை சிறையில் வைத்து கடுமையாக தாக்கியதாகவும் அவரது வழக்கறிஞர் கூறியிருந்தார். அதற்கு சாட்சியாக, அவரது கையில் கட்டு போடப்பட்டிருந்ததுடன் முகம், கை, கால்களில் காயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதற்காக சிறை மருத்துவர், அவர் பெயின் கில்லர் எடுக்க அறிவுறுத்தி இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் கோவை சிறையில் இருந்ததால், அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து நேற்று (புதன்கிழமை) மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் சவுக்கு சங்கரை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி செங்கமலச் செல்வன் “உங்கள் மீதான வழக்கு குறித்து ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?” என கேட்டார்.
அதற்கு சவுக்கு சங்கர் “இது பொய் வழக்கு. கோவை சிறையில் போலீசார் என்னை கடுமையாக தாக்கினர். இதனால் எனக்கு கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கோவை சிறையில் எனது உயிருக்கு அச்சசுறுத்தல் உள்ளது. இதனால் என்னை மதுரை சிறைக்கு மாற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.
அப்போது நீதிபதி தங்களது கோரிக்கை தொடர்பாக மனு அளிக்கும் பட்சத்தில் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறினார். இதையடுத்து, சவுக்கு சங்கரை வருகிற 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவரை மீண்டும் கோவை சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டதாகவும், கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின்பேரில் சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர்கள் மற்றும் அரசு மருத்துவக்குழுவினர் சிறைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த அறிக்கை நீதிமன்றத்தில் தனித்தனியாக சமர்பிக்கப்பட்டது.
அந்த அறிக்கையின் அடிப்படையில் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உடலில் காயம்: சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்து அறிக்கையளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு