டெல்லி:
பிரதமர் மோடி நேற்று அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து, இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக   கடந்த மார்ச் 24ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முதல் கட்டமாக  மே 17 ஆம் தேதி வரை, 21 நாட்கள் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, பின்னர் 2வது கட்டமாக மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று குறையாத நிலையில், 3வது முறையாக ஊரடங்கு மே 17ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கு தொடர்பாக ஏற்கனவே  கடந்த சில முறை மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, இன்று  இன்று இரவு 8 மணிக்கு மீண்டும்  நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்.
இந்த செய்தியை பிரதமர் அலுவலகம் டிவிட் மூலம் தெரிவித்து உள்ளது.