பா ம க  மீண்டும்  தனித்து அரசியல்

இரண்டு திராவிடக் கட்சிகளுடனும்… இரண்டு தேசியக் கட்சிகளுடனும் சேர்ந்து, அதிகார பலம், பண பலம் ஆகியவற்றை நுகர்ந்து அசுர பலம் பெற்ற கட்சி பா. ம. க!

2009 வரை இவை நடந்தன!பின்னர்’ காற்று’ மாறியது.. அதன் பிறகு அக்கட்சிக்கு, ‘தோல்வி’யே துணை யென்று ஆகிவிட்டது!

‘மாறி மாறி ‘அரசியல் செய்தது, தியாகிகளை மறந்தது, தன்னலத் தையே தன்னுடன் வைத்துக் கொண்டது, செல்வ அகந்தையால் உழைத்தோரை உதாசீனம் செய்தது… இவற்றை அப்பாவி பாட்டாளிகள் உணர்ந்தார்கள்…  தொடர் தோல்விகளை அக்கட்சிக்குத் தந்தார்கள்!

இதனால், தற்போது மீண்டும், ‘ தனித்து அரசியல்’ என்ற முடிவுக்கு பா. ம. க. வந்திருக்கிறது!

” காகித ஓடம் கடல் அலை மேலே” என்ற புகழ் பெற்ற பாடல் அதற்கு இச்சூழலில் பொருந்துகிறது தானே…!

நன்றி : ஓவியர் இரா. பாரி