சென்னை,
பா.ம.கவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் வரும் 30 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
“2016 ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்; 2017 ஆம் ஆண்டை வரவேற்போம்“ என்ற தலைப்பில் சிறப்பு பொதுக்குழு நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக தலைவர் தலைவர் ஜி.கே.மணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு, “2016ம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்; 2017 ஆம் ஆண்டை வரவேற்போம்“ என்ற தலைப்பில் வரும் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்க வளாகத்தில் உள்ள மாங்கனி அரங்கில் வரும் 30ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு இப்பொதுக்குழு நடைபெறவிருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel