சென்னை: டிசம்பர் 17ந்தேதி அன்று பாமக நிர்வாகக்குழு கூட்டம் நடைபெறும் என பாமக தலைவர் ராமதாஸ் அறிவித்து உள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இதற்கிடையில் பாமகவில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமகா பாமக இரண்டாக உடைந்துள்ளது. ஆனால், தேர்தல் ஆணையம் பாமக தலைவர் அன்புமணி என்று அறிவித்துள்ளது.
இந்த சூழலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களில் பாமக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்ப மனுக்களை விண்ணப்பிக்கலாம் என்று அன்புமணி ராமதாஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இது ராமதாஸ் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் வரும் 17 ஆம் தேதி கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் 17.12.2025 புதன்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் எனது தலைமையில் நடைபெற உள்ளது.‘ இக்கூட்டத்தில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அனைவரும் அவசியம் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறேன். இக்கூட்டத்தில் கட்சி வளர்ச்சி, அடுத்த கட்ட செயல்பாடுகள் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட முக்கியமான கருத்துகள் குறித்து ஆலோசிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]