சென்னை: பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில், இன்று மாலை பிரதமா் நரேந்திர மோடி சென்னையில் வாகனப் பேரணி பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இதையொட்டி, சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி இந்தாண்டில் 6-வது முறையாக பிரதமர் மோடி இன்று பிற்பகல் (ஏப்ரல் 9) தமிழ்நாடு வருகிறார். 2 நாள் பயணமாக தமிழ்நாடு வரும் மோடி பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். பிரதமரின் பயணத் திட்டத்தின் படி கேரள மாநிலம் பாலக்காட்டில் நாளை தேர்தல் பரப்புரையை முடித்துக்கொண்டு மாலையில் சென்னை வருகிறார். சென்னை தியாகராயர் நகரில் பாண்டிபஜார் முதல் தேனாம்பேட்டை வரை வாகனப் பேரணி (ரோடு ஷோ) மேற்கொள்கிறார்.
இந்த தேர்தல் பரப்புரையின் போது தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், வட சென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி. செல்வத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து அன்று இரவு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார். இதையடுத்து சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 9) மாலை 6 மணிக்கு தி.நகர், தியாகராய சாலையில் நடைபெறும் சாலை அணிவகுப்பு கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக சென்னை வருகிறார். இந்த சாலை அணிவகுப்பு கண்காட்சியில் அரசியல் கட்சி தலைவர்கள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
சாலை அணிவகுப்பு நடக்கும் பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளான ஜிஎஸ்டி சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, 100 அடி சாலை, அண்ணாசாலை, எஸ்.வி. படேல், காந்தி மண்டபம் சாலை மற்றும் தி.நகர் ஆகிய இடங்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை லேசான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பிற்பகல் 3 மணி முதல், தியாகராய சாலையில் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதியாகவும், தியாகராய சாலை முழுவதும், வெங்கட நாராயண சாலை, ஜி.என்.செட்டி சாலை ஆகியவை சாலை அணிவகுப்பு முடியும் வரை வாகன நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள சாலைகளில் வணிக வாகனங்கள் (Goods Vehicle) பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை இடையிடையே தடை செய்யப்படும்.
* பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் இருந்து கத்திப்பாரா நோக்கி செல்லும் வாகனங்கள்.
* மவுண்ட் பூந்தமல்லி சாலையில் இருந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள்.
* CIPET யில் இருந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள்.
* வடபழனியில் இருந்து தி.நகர் வள்ளுவர் கோட்டம் நோக்கி செல்லும் வாகனங்கள்.
* செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
* https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
* கத்திப்பாராவில் இருந்து சைதாப்பேட்டைக்கு செல்லும் வாகனங்கள்.
* CPT -யில் இருந்து விமான நிலையம் மற்றும் காந்தி மண்டபம் நோக்கி செல்லும் வாகனங்கள்.
* டைடல் பார்க்கில் இருந்து காந்தி மண்டபம் நோக்கி செல்லும் வாகனங்கள்.
* அண்ணா சிலையில் இருந்து மவுண்ட் ரோடு நோக்கி செல்லும் வாகனங்கள்.
எனவே வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை அடைய அதற்கேற்ப பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
.பிரதமரின் ரோடு ஷோவுக்கான நிபந்தனைகள்
பிரதமர் மோடி இன்று சென்னையில் ரோடு ஷோ நடத்திவிட்டு, இரவு ஆளுநர் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார். தொடர்ந்து, நாளை காலை வேலூரிலும், பிற்பகல் மேட்டுப்பாளையத்தில் நீலகிரியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகனை ஆதரித்தும் பரப்புரையில் ஈடுபட உள்ளார்.
- பிரதமரின் ரோடு ஷோவின்போது தொண்டர்கள் பட்டாசு வெடிக்கக் கூடாது.
2. வெறுப்புணர்வை தூண்டும் வகையில் முழக்கங்களை எழுப்ப தடை விதிப்பு
3. பிரதமரின் ரோடு ஷோவின்போது உரையாற்றவும் அனுமதியில்லை
4. மத நம்பிக்கைகளை காயப்படுத்தும் வகையிலும் வெறுப்புணர்வு தூண்டும் வகையிலும் முழக்கங்கள் எழுப்ப தடை
5. குண்டு துளைக்காத வாகனங்களை மட்டுமே பிரதமர் ரோடு ஷோவில் பயன்படுத்த வேண்டும்
6. பிரதமரின் ரோடு ஷோவில் பேனர், கட் அவுட்டுகள் உள்ளிட்டவற்றை வைக்கக் கூடாது என கண்டிப்பு
7. ரோடு ஷோவில் பங்கேற்பவர்கள் எந்த பதாகையையும் ஏந்திச் செல்லக்கூடாது
8. அனுமதிக்கப்பட்ட பாதையில் ரோடு ஷோ மட்டுமே நடத்த வேண்டும்; வேறு எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது.
9. நிபந்தனைகள் மீறப்பட்டால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.