சென்னை: தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி, தேர்தல் பத்திரத்தில் சில குறைபாடுகள் உள்ளன என்பதை ஒப்புக்கொண்டதுடன், தேர்தல் பத்திரம் தொடர்பான விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார்.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரம் விவகாரத்தில் உச்சநீமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து, அதன்மூலம் பலன் பெற்றவர்கள் விவரம் வெளியாகி உள்ளது. தேசிய கட்சியான பாஜக அதிக அளவில் பயன் அடைந்துள்ளதுடன், மாநில கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, திமுக, தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சி போன்றவை அதிக பலன் பெற்றுள்ளது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்த நிலையில், தனியார் ஊடகம் சார்பில், பிரதமர் மோடியுடன் நடத்தப்பட்ட நேர்காணலில், தேர்தல் பத்திரம் விவகாரம் தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் கூறிய பிரதமர் மோடி, தேர்தல் பத்திரம்  விவாகரத்தில் நான் என்ன செய்து விட்டேன். எதனால் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது என சொல்லுங்கள் என எதிர்கேள்வி எழுப்பியவர், எதற்காக இவர்கள் (எதிர்க்கட்சிகள்) எல்லோரும் சந்தோசப்பட்டு ஆடுகிறார்கள் என்பது தெரிய வில்லை.. இவர்கள் எல்லோரும் துன்பம்தான் படப்போகிறார்கள் என்றவர்,  இந்த புத்தாசாலிகளிடம் (எதிர்க்கட்சிகள்)  கேட்கிறேன்.

2104-க்கு முன்பு எத்தனை தேர்தல் நடந்துள்ளது. அத்தனை தேர்தல்களிலும் அரசியல் கட்சிகள் எவ்வளவு பணத்தை செலவிட்டிருக்கும்,  எவ்வளவு செலவு ஆகியிருக்கும். அந்த பணம் அவர்களுக்கு எங்கிருந்து வந்தது? யாருக்கு கொடுக்கப்பட்டது என்று எந்த நிறுவனமாவது சொல்ல முடியுமா?.

தற்போது மோடி வந்து தேர்தல் பத்திரத்தை உருவாக்கிவிட்டார். அதனால் உங்களால் தேட முடிகிறது. பணம் யார் கொடுத்தது. யார் வாங்கினார்கள். எப்போது கொடுத்தது. எல்லா விவரங்களும் கிடைக்கிறது என்றவர், தேர்தல் பத்திரத்தில் சில குறைபாடுகள் உள்ளன என்பதை ஒப்புக்கொண்டதுடன், எல்லா விசயங்களும் முழுமையாக இல்லை. சில குறைகளை தீர்த்துவிட்டால், தேர்தல் பத்திரத்தில் நன்மைகள் கிடைக்கும் என்றார்.