மும்பை: 
பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி சற்று நேரத்தில் மும்பை செல்ல உள்ளதாக தகவல்  வெளியாகி உள்ளது.

இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் லதா பங்கேஷ்கர் இந்தி, தமிழ், மராத்தி என பல்வேறு மொழிகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். லதா மங்கேஷ்கர் முதன் முதலாக 1942 இல் கிதி ஹசால் என்ற மராத்திப் பாடலைப் பாடினார். கடந்த 70 ஆண்டுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார். தமிழில் வளையோசை, ஆராரோ ஆராரோ, எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன் உட்பட பல்வேறு பாடல்களை பாடியுள்ளார்.

இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் லதா மங்கேஷ்கர் இன்று காலமானார்.

இந்நிலையில், பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி சற்று நேரத்தில் மும்பை செல்ல உள்ளதாக தகவல்  வெளியாகி உள்ளது.