ஜம்மு-காஷ்மீர்:
ர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் உங்கள் பங்கை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று ராணுவ வீரர்களுக்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை ராணுவ வீரர்களுடன் சேர்ந்து கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டும் தீபாவளி கொண்டாடுவதற்காக ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில்உள்ள நவ்ஷேரா செக்டர் என்ற முன்களப் பகுதிக்குப் பிரதமர் மோடி சென்று  அங்கு அவர் ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார்.

அப்போது பேசிய அவர்,  சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் உங்கள் பங்கை நினைத்துப் பெருமைப்படுகிறேன் என்று அவர் தெரிவித்தார்.