புதுடெல்லி:
நாட்டு மக்கள் அனைவருக்கும் ராகுல்காந்தி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராகுல்காந்தி வெளியிட்ட  டிவிட்டர் பதிவில், தீப ஒளி பாகுபாடின்றி அனைவரையும் ஒளிரச்செய்கிறது. இதுவே தீபாவளிச்செய்தி. உங்கள் அன்புக்குரியவர்களுடன் தீபாவளியை கொண்டாடுங்கள். அனைவரின் இதயங்களையும் இணைப்பவராக இருங்கள். அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார்.