நெல்லை:
பிரதமர் மோடி இந்தியையும், இந்துத்துவா கொள்கையும் நிலைநாட்டும் வகையில் செயல்படுகிறார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தி, சமஸ்கிருதத்தை திணித்து தமிழ்நாட்டை கைப்பற்ற நினைக்கும் பாஜகவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி இந்தியையும், இந்துத்துவா கொள்கையும் நிலைநாட்டும் வகையில் செயல்படுகிறார் என்று அவர் கூறினார்.