சென்னை

றைந்த முன்னாள் முதல்வர் எம் ஜி ஆரின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி அவருக்கு புகழாரம் சூட்டி உள்ளார். 

இன்று தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.  எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி எம்.ஜி.ஆருக்கு எக்ஸ் வலைத்தளத்தில் புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில்,

”இன்று எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவரது வாழ்க்கையை நினைவு கூர்ந்து கொண்டாடுகிறோம். அவர் தமிழ் திரைப்படத்தின் உண்மையான அடையாளமாகவும், தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராகவும் இருந்தார்.

அவரது படங்கள், குறிப்பாக சமூக நீதி குறித்த படங்கள் வெள்ளித்திரையைத் தாண்டி இதயங்களை வென்றன.

தலைவராகவும், முதல்வராகவும் மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர், தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரது பணி தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கிறது.”

என்று தெரிவித்து உள்ளார்.