போபால்

த்தியப் பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடி ரூ.4000 கோடி அளவிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உள்ளார்.

இன்று பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காகப் பிரதமர் மோடி, மத்தியப்பிரதேச மாநிலத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் . அம்மாநிலத்தில் ரூ.4,000 கோடி மதிப்பிலான ரயில்வே மற்றும் சாலை திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார் .

பிரதமர் மோடி சுமார் 2 ஆயிரத்து 475 கோடி ரூபாய் மதிப்பிலான கோட்டா – பினா ரயில் பாதையை இரட்டிப்பாக்கும் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

மோரி-கோரி-விதிஷா-ஹினாட்டியா 4 வழிச்சாலை, ஹினாட்டியா-மெலுவா இருவழிச்சாலை என ரூ.1,580 கோடி ரூபாய் மதிப்பிலான 2 சாலை திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.