டில்லி

ன்று உத்தரப் பிரதேசத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பிரதமர் மோடி ரூ.1000 கோடி நிதி உதவி வழங்குகிறார்.

வரும் ஆண்டு உத்தரப்பிரதேச சட்ட பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.  இதையொட்டி பிரதமர் மோடி உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார்.  அதில் ஒன்றாக இன்று பிரயாக்ராஜ் நகரில் மிகப் பிரம்மாண்டமான ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பெண்களுக்கான புதிய திட்டங் களை தொடங்கி வைக்கிறார்.

தவிர 16 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.1,000 கோடி நிதி உதவியை பிரதமர் வழங்கவுள்ளார்.  மேலும் 20 லட்சம் பெண்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டம், பெண் குழந்தை களுக்கு நிதியுதவி செய்யும் திட்டம் ஆகியவற்றைப் பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார். இந்த மாநாட்டில் 2 லட்சம் பெண்கள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டின்போது பெண் குழந்தைகள் நலனுக்காக முதல்வர் கன்யா சுமங்களா திட்டத்தின் கீழ் ரூ.20 கோடியைப் பிரதமர் நரேந்திர மோடி வழங்க வுள்ளார். இன்று 202 சத்துணவு தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு மோடி அடிக்கல்  நாட்டுகிறார். இவை தலா ரூ. 1 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளன.