இமாச்சல பிரதேசம்:
பிலாஸ்பூர் எய்ம்ஸ் இன்று திறக்கப்படுகிறது.

இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் இன்று இமாச்சல பிரதேசம் செல்லும் மோடி அங்கு ரூ.3,650 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் காலை 11.30 மணிக்கு பிலாஸ்பூரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.

அக்டோபர் 2017-ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த மருத்துவமனை, பிரதமரின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ளது. அது தற்போது 95% பணிகளை நிறைவடைந்து திறக்கப்படவுள்ளது.