ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் சிறைத்துறை டி.ஜி.பி ஹேமந்த் குமார் லோஹியா கொலைசெய்யப்பட்டதால், அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணமாக  காஷ்மீர் சென்றுள்ளார். காஷ்மீரில் பாதுகாப்பு கருதி பல்வேறு இடங்களில் இன்டர்நெட் முடக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் பகுதியில் சிறைத்துறை டி.ஜி.பியாக பணியாற்றி  ஹேமந்த் குமார் லோஹியா, அவரது வீட்டில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது வீட்டுவேலைக்காரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பயங்கரவாத அமைப்பு ஒன்று பொறுப்பேற்று, மிரட்டல் விடுத்துள்ளது.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மற்றும் நாளை என 2 நாள் பயணமாக  ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து பாதுகாப்பு காரணமாக தற்போது ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் இன்டர்நெட் முடக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கடந்த 7 மணிநேரத்திற்கும் மேலாக இன்டர்நெட் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. மாலை 7 மணி வரையில் இன்டர்நெட் முடக்கம் செய்யப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.