டில்லி

டில்லி செங்கோட்டையில் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு  6வது முறையாக தேசியக் கொடியை பிரதமர் மோடி ஏற்றி வைத்தார் .


இன்று நாடு முழுவதும் 73வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த நேற்று இரவு  நாட்டு மக்களுக்குச் சுதந்திர தின உரையாற்றினார். சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தலைநகர் புதுடெல்லியில்  உள்ள செங்கோட்டையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையைப் பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். அணிவகுப்புக்குப் பிறகு, பிரதமர் மோடி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

கொடியேற்று விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள், முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள், மற்றும் உள்நாட்டு வெளிநாட்டுப் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்