டில்லி:

துணை முதல்வராக பதவி ஏற்ற ஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் இன்று மதியம் இணைந்தன.

இதைத் தொடர்ந்து துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றார். அவருக்கு ஆளுனர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில் துணை முதல்வராக பதவி ஏற்ற ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடன் பதவி ஏற்றவர்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அவர் வரும் காலங்களில் தமிழகம் வளர்ச்சியின் உச்சத்தை அடையும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.