டில்லி

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இன்று இந்தியாவின் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி இன்று டில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து  நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

இதனால் தலைநகர் டில்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது டிவிட்டர் பதிவில்,

“சுதந்திர தின வாழ்த்துக்கள். நமது மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நாம் மரியாதை செலுத்துவதுடன், அவர்களின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதற்கான நமது  உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.

ஜெய் ஹிந்த்!”

என்று பதிவிட்டுள்ளார்.