நிஜாமாபாத்

மிழக அரசு கோவில்களை ஆக்கிரமித்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார்.

இன்று தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அவர் தனது உரையில் தமிழ்நாட்டுக் கோவில்களை மாநில அரசு ஆக்கிரமித்துள்ளதாகவும், கோவில்களின் சொத்துக்கள் மற்றும் வருமானங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும் சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தளங்களைத் தென்னிந்திய மாநில அரசுகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவில்லை என்று குறிப்பிட்ட அவர், இந்து கோவில்கள் மீது மட்டும் ஏன் இந்த கட்டுப்பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

தமிழக அரசு கோவில்களை விடுவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்துமா என்று கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி, தமிழகத்தில் உள்ள தங்கள் கூட்டணி கட்சியான திமுக விடம் கோவில்களை விடுவிக்குமாறு காங்கிரஸ் கட்சி வலியுறுத்துமா என்றும் கேள்வி எழுப்பினார்.

பிரதமர் மோடியின் இந்த குற்றச்சாட்டு அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.