புதுடெல்லி:
யவுசெய்து பாதுகாப்பாக இருங்கள். அனைத்து முன்னெச்சரிக்கை நெறிமுறைகளையும் பின்பற்றுங்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் சற்று தணியத்தொடங்கியுள்ளது. இதனால், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக முக்கிய சுற்றுலாத்தளங்கள் உள்பட பல இடங்களில் மக்கள் கூட்டம் அதிகஅளவில் காணப்படுகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி , தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள். அனைத்து முன்னெச்சரிக்கை நெறிமுறைகளையும் பின்பற்றுங்கள்” என பதிவிட்டுள்ளார். தனது டுவிட்டுடன் கொரோனா இன்னும் ஓயவில்லை என ஆங்கிலத்தில் ஹேஷ்டேக்குடன் பதிவிட்டுள்ளார்.