புதுடெல்லி:

போதை எதிர்ப்பு பிரச்சாரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை பயன்படுத்தும் முடிவை மத்திய அரசு கைவிட்டது.


ஜுன் 26-ம் தேதி சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு நாள்.

இதனையொட்டி, விழிப்புணர்வு பிரச்சாரத்துக்கு பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை பயன்படுத்தலாம் என்று உத்தேசிக்கப்பட்டது.

போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி அதிலிருந்து விடுபட்டவர் என்பதால், விழிப்புணர்வு பிரச்சாரத்துக்கு சஞ்சய் தத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்கு மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் அளிக்கவில்லை.
இதனையடுத்து, போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்துக்கு சஞ்சய் தத்தை பயன்படுத்தும் முடிவை அதிகாரிகள் கைவிட்டனர்.