சென்னை: அரசு கலைஅறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புக்கு இன்றுமுதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் இளங்கலை படிப்புக்கான விண்ணப்பங்கள் முடிவடைந்து கல்லூரிகள் ஜூலை இறுதியில் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த  நிலையில் முதுநிலை படிப்புக்காக  அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில், 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில்   24,341 இடங்களுக்கு இன்று முதல்  செப்டம்பர் 16ம் தேதி வரை இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 www.tngasapg.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.  தரவரிசைப்பட்டியல் 20ம் தேதி வெளியிடப்பட்டு மாணவர் சேர்க்கை 21ம் தேதி தொடங்கும் என்றும் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.