சென்னை

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் உயர்ந்ததால் மக்கள் கடும் துயரம் அடைந்துள்ளனர்.

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்ள அரசு அனுமதி அளித்தது. அப்போது முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் தினசரி மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாற்றின் பல புதிய உச்சங்களை எட்டியது. அதன் பிறகு விலைகள் குறையத் தொடங்கியதால் மக்கள் சற்றே மகிழ்ந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி வெகுநாட்களுக்கு நீடிக்கவில்லை.

தற்போது தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்ந்து வருகின்றது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 காசுகள் அதிகரித்துள்ளது. அதைப் போல் டீசல் விலையும் லிட்டருக்கு 11 காசுகள் அதிகரித்துள்ள்து.

இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 75.02க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு ரூ. 71.09 ஆக உயர்ந்துள்ளது.

மீண்டும் உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையால் மக்கள் கடும் துயர் அடைந்துளனர்.