சென்னை:
மைக்​ரான் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஆப்பிரிக்க நாடான டான்சானியாவில் இருந்து டெல்லி திரும்பிய 33 வயது நபர் ஒருவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் ஒமைக்ரான் உறுதியானது. மேலும், டான்சானியாவில் இருந்து டெல்லி திரும்பிய 17 பேருக்கு கொரோனா உறுதியானது. ஏற்கனவே கர்நாடகாவில் இரண்டு பேருக்கும், மகாராஷ்டிரா, குஜராத்தில்  ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டது.

தற்போது டெல்லியிலும் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டது. இதனால் இதுவரை இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், ஒமைக்​ரான் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஒமைக்​ரான் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம். தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு இல்லை. மேலும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படாத வகையில் உரியப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.