சென்னை: கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி தேவையில்லை என மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தத் தேவையில்லை என மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள மருத்துவ வல்லுநர்கள் குழு தனது ஆய்வு அறிக்கையை பிரதமரிடம் அளித்துள்ளது. அதில், ஹ
கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி சரியான பலனைத் தருகிறது என்பதை உறுதி செய்த பின்னர், தடுப்பூசி போடுவதை தொடங்கலாம்.
தற்போது நடைமுறையில் உள்ள தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு மறுஆய்விற்கு உட்படுத்த வேண்டும்.
டெல்டா வகை தொற்றுப் பரவல் அதிகம் உள்ள இடங்களில் மக்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்குவதற்கான கால இடைவெளியை குறைக்கலாம்,
கிராமப்புற சுகாதார நிலையங்களுக்கு தடுப்பூசிகள் விநியோகத்தை அதிகப்படுத்த வேண்டும்.
தற்போதைய சூழலில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதைக் குறிப்பிட்டுள்ள மருத்துவ வல்லுநர் குழு, அதைவிட தொற்றால் அதிக பாதிப்புக்குள்ளாவோரைக் கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை முதன்மையாகக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
தொற்றுப் பரவல் ஏற்படும் இடங்களை கண்டறிந்து அப்பகுதிகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்துவது அவசியம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.