ரெய்க்ஜோன்ஸ்

திடீரென ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்ததால் மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வடக்கு அட்லாண்டிக் கடலி; உலகின் 18வது பெரிய தீவான ஐஸ்லாந்து ல் அமைந்துள்ளது  ஐஸ்லாந்து நாட்டின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை திடீரென வெடித்துச் சிதறத் தொடங்கியுள்ளது.

இந்த எரிமலை கிரின்டாவிக் நகரத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது  இந்த எரிமலை நேற்று இரவு ஆக்ரோஷத்துடன் வெடிக்க தொடங்கி தீப்பிழம்பைக் கக்கி வருகிறது.

இங்குக் கடந்த ஒரு வாரமாக குமுறிக் கொண்டிருந்த நிலையில் நேற்று வெடித்துச் சிதறியுள்ளது.   கிரின்டாவிக் பகுதியில் வசிக்கும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், அவசரமாக வெளியேற்றப்பட்டு அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

இந்த எரிமலை வெடிப்புக்கு சில மாதங்களுக்கு முன்பு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.