மும்பை:
பிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் அதிகபட்சமாக மிட்சல் மார்ஷ் 63 ரன்கள் அடித்தார். பஞ்சாப் அணி பந்து வீச்சாளர்களில் லிவிங்ஸ்டோன் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

160 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய பஞ்சாப் அணி 142 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் டெல்லி அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் மும்பை – ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன.