புதுடெல்லி:
கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததை அடுத்து சர்வதேச சந்தையில் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

இந்தியாவின் ஏற்றுமதியை நம்பியுள்ள அண்டை நாடுகள், உணவுப் பொருட்கள் தட்டுப்பாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை நாடுகள் தவிர்த்து பிற நாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் இந்த நடவடிக்கை காரணமாக சர்வதேச சந்தையில் கோதுமை விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் சிகாகோவில் உணவுப் பொருட்களுக்கான விலை குறியீட்டில் கோதுமையின் விலை 5.90% அளவுக்கு உயர்ந்துள்ளது.

கோதுமை உற்பத்தியில் உலகின் 2வது பெரிய நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.