பாட்னா

பாட்னா உயர்நீதிமன்றம் பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கடந்த  ஜனவரி 7ஆம் தேதி முதல் பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.  , இந்த கணக்கெடுப்புக்குத் தடை விதிக்கக் கோரி பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கைத் தலைமை நீதிபதி கே.வி.சந்திரன் தலைமையிலான அமர்வு விசாரித்தது.  நேற்றுடன் வழக்கு விசாரணை நிறைவடைந்தது.

விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான தினு குமார், “சாதிவாரி கணக்கெடுப்பு என்பது மாநிலத்தின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என்பதால் மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியாது” என்று வாதிட்டார். பீகார் அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.கே. ஷஹி, “மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும், சமூகங்களின் நிலையை உயர்த்துவதற்குமே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது” என்று வாதிட்டார்.

இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், பீகார் அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்., இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.  பீகார் முதல்வர் நிதிஷ்குமார்  சாதிவாரி கணக்கெடுப்புக்குத் தீர்மானம் நிறைவேறிய பிறகே கணக்கெடுப்பு நடப்பதால் உயர்நீதிமன்றம் ஏன் தடை விதித்துள்ளது என்பதே தமக்குப் புரியவில்லை எனக் கருத்து தெரிவித்துள்ளார்.