டெல்லி: பதஞ்சலியின் தவறான விளம்பர வழக்கின் விசாரணைக்கு ஆஜரான பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர், இது தொடர்பாக ஊடகங்களல்  பகிரங்க மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் கைகூப்பி தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு 23ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

மருந்துப் பொருட்களுக்கான தவறான விளம்பரங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தொடர்பான அவமதிப்பு வழக்கில் பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி எம்டி ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோரின் மன்னிப்பை ஏற்க நீதிபதிகள் ஹிமா கோஹ்லி மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.

கடந்த 2ந்தேதி அன்று நடைபெற்ற விசாரணையின்போது,  பதஞ்சலி ஆயுர்வேதத்தின் தவறான விளம்பரங்களுக்கு எதிராக மத்திய அரசின் செயலற்ற தன்மை குறித்து இந்திய உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 2 அன்று கேள்வி எழுப்பியது. மேலும்,   பதஞ்சலி   மருந்துப் பொருட்களுக்கான நிறுவனத்தின் தவறான விளம்பரங்கள் குறித்த உத்தரவு தொடர்பான அவமதிப்பு வழக்கில் பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி எம்டி ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோரின்  வழக்கறிஞர்கள் தவறான விளம்பர வழக்கில் பொது மன்னிப்பு கேட்க முன்வந்ததையடுத்து, அவமதிப்பு வழக்கில் இருந்து தங்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில்,  பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரியதுடன் பிரம்மான பத்திரமும் தாக்கல் செய்தனர். ஆனால், அவர்களின் மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம்,  மறுத்துவிட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது,  நீதிபதி ஹிமா கோஹ்லி கூறுகையில், ராம்தேவ் மற்றும் பால்கிருஷ்ணா என்ன சொல்கிறார்கள் என்பதை நீதிமன்றம் கேட்க விரும்புகிறது, மேலும் அவர்களை ஆஜராகுமாறு கோரியது. அப்போது பேசிய, ராம்தேவ் பகிரங்க மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி தெரிவித்தார்.

நீதிபதி ஹிமா கோஹ்லி கூறுகையில், ராம்தேவ் மற்றும் பால்கிருஷ்ணா என்ன சொல்கிறார்கள் என்பதை நீதிமன்றம் கேட்க விரும்புகிறது, மேலும் அவர்களை முன்வரச்சொல்லுங்கள் என்றது. இதையடுத்து, பாபா ராம்ராவ், மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, நீதிபதிகள் முன்னிலையில் கைகூப்பி மன்னிப்பு கோரினர். மேலும், தாங்கள் ஊடகங்களில் பொது மன்னிப்பு கோர தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

அப்போது பாபா ராம்தேவ் தரப்பில் வழங்கப்பட்ட விளக்கத்தில், “தவறான” விளம்பரங்கள் குறித்து பகிரங்க மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாகவும், தவறு என கூறப்படும் எங்களது செயல்பாடுகள் அனைத்தும் உற்சாக மிகுதியால் நடைபெற்றது. தனது கருத்துகளுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன். எதிர்காலத்தில் கூறப்படும் அனைத்து உரிமை கோரல்களும் உரிய ஆதாரங்களுடன் வெளியிடப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கூறிய  நீதிபதிகள், “இது முற்றிலும் கவனக்குறைவான செயல்பாடாகும். சட்டம் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தும்” என்றனர்.

அதற்கு பதிலளித்த ராம்தேவ், எதிர்காலத்தில் கவனமாக இருப்பேன். அந்த தவறுகள் உற்சாகத்தில் நடந்தது, இனி நடக்காது” என்று உறுதியளித்தார்.

இதையடுத்து கருத்து தெரிவித்த, நீதிபதிகள், ”உங்கள் மன்னிப்பை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் அல்லது உங்கள் கடந்த காலத்தை புறக்கணிப்போம் என்று நாங்கள் கூறவில்லை. நீதிமன்ற உத்தரவுகளை மீறியுள்ளீர்கள், அதனால் நீங்கள் அப்பாவியும் இல்லை” என சாடினர்.

அதையடுத்து, ராம்தேவ் மற்றும் பால்கிருஷ்ணா ஆகிய இருவரும், தங்களது தயாரிப்புகளின் மருத்துவத் திறன் குறித்து உயர்ந்த கூற்றுக்களை வெளியிட்டதற்காக உச்ச நீதிமன்றத்தில் “நிபந்தனையற்ற மற்றும் தகுதியற்ற மன்னிப்பு” கோரியுள்ளனர். அதைதொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு தனித்தனி பிரமாணப் பத்திரங்களில், உச்ச நீதிமன்றத்தின் கடந்த ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி உத்தரவில் பதிவு செய்யப்பட்ட “அறிக்கையை மீறியதற்காக” ராம்தேவ் மற்றும் பால்கிருஷ்ணா தகுதியற்ற மன்னிப்பு கோரியுள்ளனர். நவம்பர் 21, 2023 உத்தரவில், பதஞ்சலி ஆயுர்வேதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர், “இனிமேல் எந்தவொரு சட்டத்தையும் மீறக்கூடாது, குறிப்பாக அது தயாரித்த மற்றும் சந்தைப்படுத்தப்படும் பொருட்களின் விளம்பரம் அல்லது பிராண்டிங் தொடர்பானது” என்று உறுதியளித்ததாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், மருத்துவத் திறனைக் கோரும் அல்லது எந்த மருத்துவ முறைக்கும் எதிரான சாதாரண அறிக்கைகள் எந்த வடிவத்திலும் ஊடகங்களுக்கு வெளியிடப்படாது”. பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட் “அத்தகைய உத்தரவாதத்திற்குக் கட்டுப்பட்டிருக்கிறது” என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

குறிப்பிட்ட உத்தரவாதத்தை கடைப்பிடிக்காதது மற்றும் அடுத்தடுத்த ஊடக அறிக்கைகள் உச்ச நீதிமன்றத்தை எரிச்சலடையச் செய்தன, பின்னர் அவர்கள் மீது அவமதிப்பு நடவடிக்கைகளை ஏன் தொடங்கக்கூடாது என்பதை விளக்குமாறு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.